×

ஊத்துக்கோட்டையில் திமுக சார்பில் 270 மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பேரூர் திமுக மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், அவைத் தலைவர் வெங்கடேசன்,  பொருளாளர் கே.சி.ஜெயராமன்,  துணைச் செயலாளர்கள் திரிபுரசுந்தரி, பார்த்திபன், தமிழ் செல்வன், அப்துல்பரீத் முன்னிலை வகித்தனர்.

முகாமில் டாக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் 25க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் 750 பேருக்கு கண் சிகிச்சை செய்தனர். இதில் 89 பேருக்கு கண்ணாடி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. 27 அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி பங்கேற்று 70 பெண்களுக்கு புடவைகளையும் 750 பேருக்கு பிரியாணியும்  வழங்கினார்.முன்னதாக ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 270 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோகுல்கிருஷ்ணன்,  கோல்டுமணி, இந்துமதி, ஜீவா, கல்பனா,  ஒன்றிய பிரதிநிதி மோகன்பாபு, வேலு கலந்துகொண்டனர்.



Tags : DMK ,Uthukottai , Thirukkural book for 270 students on behalf of DMK in Uthukottai
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி