ஜார்ஜியா: அட்லாண்டா நாட்டிற்கு மேற்கே பகுதியான டக்ளஸ்வில்லியில் உள்ள வீடு ஒன்றில் விருந்து நடந்தது. அந்த விருந்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்ற உறவினர்கள் போதைப் பொருளை புகைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டிற்கு வெளியே சிலர் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த போது, திடீரென வந்த சிலர் விருந்தினர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தனர். இந்த சம்பவத்தில் இரு இளைஞர்கள் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்ததாக டக்ளஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.