×

பேனா வாங்க சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த 75 வயது முதியவர்: போக்சோ சட்டத்தில் கைது

கொல்கத்தா: கொல்கத்தாவில் பேனா வாங்க சென்ற சிறுமியை 75 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ததால், அவரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த தாகூர்புகூரை சேர்ந்த  பூபேந்திர நாத் ஹவ்லதார் (75) என்பவர், தனது வீட்டில் எழுதுபொருள்கள் விற்கும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடையில் பள்ளிச் சிறுமிகள் எழுதுபொருட்களை வாங்கிச் செல்வர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதியவரின் கடையில் பேனா வாங்கச் சென்ற 14 வயது சிறுமியை, முதியவர் வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அங்கிருந்து தப்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது தாயிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்  ஹரிதேவ்பூர் போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட முதியவர் பூபேந்திர நாத் ஹவ்லதாரை மீது போக்சோ வழக்கை பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : 75-year-old man who raped girl who went to buy pens: Arrested under POCSO Act
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது