×

தொழிலதிபர், 2 நண்பர்கள் சேர்ந்து ‘லிப்டில்’ மது அருந்தி புகைப்பிடித்ததால் கைது

நொய்டா: உத்தரபிரதேசத்தில் லிப்டில் மது அருந்தி புகைபிடித்த தொழிலதிபர் மற்றும் அவரது இரு நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் அங்குஷ் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் ஆஷிஷ் கவுசிக், திலீப் சிங் ஆகியோர், ஏஸ் சிட்டி சொசைட்டியின் ‘லிப்டில்’ சென்றனர். நண்பர்கள் இருவரும் குர்கானில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் லிப்ட்டில் சென்ற போது மது அருந்திக் கொண்டே சிகரெட் பிடித்தனர்.

இவர்களது செயல்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுதொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ அடுத்த நாள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து பிஸ்ராக் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில் ராஜ்புத், மேற்கண்ட மூன்று நபர்களையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிஆர்பிசியின் 151வது பிரிவின் கீழ் மூவரும் கைது செய்யப்பட்டனர். லிப்டில் புகைபிடித்ததற்காக ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் மது அருந்தியதற்காகவும், புகைப்பிடித்ததற்காகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Businessman , Businessman, 2 friends arrested for drinking and smoking in 'lift'
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது