×

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2022 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில்
(ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500 மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர் அலுவலகத்தில்  இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் , மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

மாவட்டங்களிலிருந்து நேரடியாக வரப்பெலாம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சென்னை மாவட்டத்திலுள்ளவர்கள் இயக்குநர், தமிழ்வளர்ச்சி இயக்ககம், தமிழ்சாலை, எழும்பூர், சென்னை -8 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பலாம் என்றும் விண்ணப்பங்கள் அனுப்பப வேண்டிய கடைசி நாள் 31.03.2023 ஆகும்.  



Tags : Tamil Nadu ,Tamil Development Department ,Government of Tamil Nadu , Tamil Nadu Government: Government of Tamil Nadu welcomes applications for grants to mature Tamil scholars on behalf of the Tamil Development Department.
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...