திருச்சி: திருச்சி அருகே பீகாரை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்டதாக கூறி டிக்கெட் பரிசோதகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி ரயில் நிலையம் அருகே எஸ்.ஆர்.எம்யூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் வசித்துவரும் பீகாரை சேர்ந்த டிடிஆர் அரவிந்த்குமாரை குடிபோதையில் ஒருவர் தாக்கியதாக புகார் அழைத்துள்ளார்.