×

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் விவசாயிகளுக்கான மும்முனை மின்சார விநியோக நேரம் அறிவிப்பு.!

சென்னை: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் விவசாயிகளுக்கான மும்முனை மின்சார விநியோக நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. டெல்டா பகுதிகளில் குரூப் 1, குரூப் 2  இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

மேலும், டெல்டா மாவட்டங்களில் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு  நள்ளிரவு 12 மணி முதல் காலை ஆறு மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை  9:30 மணியில் இருந்து ம‌திய‌ம்  3.30  மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணி முதல் விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags : delta , Notification of three-phase power supply timings for farmers in delta and non-delta districts.!
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை