சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் பலருக்கு காய்ச்சல், தொண்டைவலி, உடல் சோர்வு போன்றவைகளால் அதிகமனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை என்பது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமின்றி குடிசை பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்ற பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடு தோறும் சென்று நிலவேம்பு கசாயம் விநியோகிக்க வேண்டும்.
