சென்னை: சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ‘கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட்’ என்ற முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இத்திட்டத்தின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.