×

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை 10 மாதங்களாக குறைப்பு..!!

சென்னை: சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டினருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை 10 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக வங்கதேச நாட்டைச் சேர்ந்த சிலர் மீது 2018ல் திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கில் முகமது மொனின்வார் ஹுசைன் உள்ளிட்டோருக்கு திருப்பூர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி மொனின்வார் ஹுசைன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.


Tags : Bangladeshis , Illegality, Bangladeshi nationals, reduction in prison terms
× RELATED மாலத்தீவு தலைநகரில் இந்தியர்கள்...