×

மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் கைது

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, அந்தப்பகுதியைச் சேர்ந்த கயல்விழி (45) மற்றும் உமா (34)  ஆகியோர் தன்னை சில நபர்களிடம் அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ராமநாதபுரம் எஸ்பியிடம் புகார் அளித்தனர். விசாரணையில், பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவர் மற்றும் பரமக்குடி நகர் மன்ற உறுப்பினருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனத் தலைவர் புதுமலர் பிரபாகர், ரெடிமேட் கடை நடத்தி வரும் ராஜா முகமது ஆகியோர் தன்னை கடத்தி சென்று கட்டாயபடுத்தி கடந்த 26.12.22 முதல் 21.2.2023 வரை பார்த்திபனூர் அருகே உள்ள தங்கும் விடுதியில் வைத்து பலமுறை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சிகாமணி, புதுமலர் பிரபாகர், ராஜா முகமது மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : ADMK , 5 people including AIADMK councilor arrested for abducting and raping a student
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...