×

பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் சந்திப்பு

டெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

ஒன்றிய வெளியுறவுத்துறை சார்பில் டெல்லியில் நடத்தப்படும் ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் இந்தியாவில் இருப்பதில் எப்பொழுதும் மிகுந்த உற்சாகம். உலகிலேயே சிறந்த விருந்தோம்பல் கொண்ட நாடு. உலகிலேயே எனக்குப் பிடித்த நகரங்களில் ஒன்றான டெல்லியில் சில நாட்கள் கழித்தேன் என நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பீட்டர்சன், சிறப்பான வரவேற்பிற்கு நன்றி எனவும் கனிவான மற்றும் ஊக்கம் கொடுக்கும் மனிதர், இது ஒரு சுவாரஷ்யமான உரையாடல் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார். மோடியை சந்தித்த அவர், உங்கள் பிறந்தநாளில் சிறுத்தைகளை விடுவித்ததைப் பற்றி பேசுவதில் பெருமை அடைகிறேன் எனவும் உங்களை மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.


Tags : England ,Pietersen ,PM Modi , Former England cricketer Pietersen meets PM Modi
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்