×

சீர்காழி அரசுக் கல்லூரி மாணவனை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவர் கைது

சீர்காழி: சீர்காழி அருகே புத்தூரில் உள்ள அரசுக் கல்லூரி மாணவனை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கல்லூரி பேராசிரியர் சத்தியமூர்த்தி, மாணவி ஒருவரின் செல்போனுக்கு தவறான குறுச்செய்தியை அனுப்பியுள்ளார். தவறான குறுச்செய்தி அனுப்பிய பேராசிரியரை தட்டிக்கேட்ட மாணவனை அடியாள் வைத்து கத்தியால் குத்தியுள்ளனர். கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த மாணவன் தீலிப்குமார் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  


Tags : Sirkazhi State College , Sirkazhi, Government College student, one arrested in case of stabbing
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...