சென்னை: கால பருவநிலை மாற்றத்தை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அமைத்த நிர்வாக குழு ஒரு முக்கியமான முயற்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டத்தில் பங்கேற்ற பல்துறை நிபுணர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தான் கால பருவ நிலை தொடர்பாக நிர்வாக குழுவை முதன் முறையாக அமைத்துள்ளதாக மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
