×

பீகாரை தொடர்ந்து ஒடிசாவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

புவனேஸ்வர்:பிற்படுத்தப்பட்ட பிரிவில் ஜாதிவாரியாக எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய பீகார் மாநில அரசு கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், ஒடிசா அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. வரும் ஜூலை 12ம் தேதிக்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.இது பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.



Tags : Odisha ,Bihar , Caste wise census in Odisha followed by Bihar
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை