×

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாளர்களின் வீடுகளை இடிப்போம்: தெலங்கானா பாஜ தலைவர் பேச்சு

திருமலை: தெலங்கானாவில் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபடுவோரின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என பாஜ மகளிர் மோர்ச்சா கூட்டத்தில் மாநில தலைவர் கூறினார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாஜ மகளிர் மோர்ச்சா கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாநில தலைவர் பண்டி சஞ்சய் பேசியதாவது: தெலங்கானா மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள், கொலை போன்றவற்றில் ஈடுபடுபவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்கப்படும்.   இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Telangana BJP , We will demolish the houses of perpetrators of violence against women: Telangana BJP president's speech
× RELATED தெலுங்கானா பாஜக சட்டப்பேரவை தேர்தல்...