சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றியை வழங்கிய மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில்: திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் அங்கீகரிக்கும் வகையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. ஈரோடு பாதை இந்தியாவுக்கான பாதையாக உழைப்போம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
