பொன்னேரி: காட்டுப்பள்ளி ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் மற்றும் உடற்பயிற்சி கூட கட்டிடம் கட்டுதவற்கு பூமி பூஜை நடந்தது. மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சியில், காமராஜர் துறைமுகத்தின் சமூக பொறுப்பு உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் மற்றும் உடற்பயிற்சி கூட கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை, ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, காமராஜ் துறைமுக டி.ஜி.எம்.ராதாகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள் எல்லுமுத்து, சுரேஷ், ஊராட்சி செயலர் நாகஜோதி, மக்கள் நலப் பணியாளர் முருகானந்தம், அன்பு, சவுரிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.