சென்னை: கோவையில் யானை வழித்தடத்தில் சட்டவிரோத செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 118 செங்கல் சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 6ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மின்சார வாரியத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.