ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அடுத்தடுத்த சுற்று நிலவரங்களை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் கிருஷ்ணன்ணுன்னி தெரிவித்துள்ளார். தாமதத்தை ஈடுசெய்ய கூடுதல் கணினிகள் அமைத்து சுற்று விவரங்களை விரைந்து அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையசேவை பாதிப்பால் அதிகாரப்பூர்வ முடிவுகளை பதிவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.