×

ஈரோட்டில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால் போலீசாருடன் செய்தியாளர்கள் வாக்குவாதம்; மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை..!!

ஈரோடு: ஈரோட்டில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால் போலீசாருடன் செய்தியாளர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. 2 சுற்றுகள் முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை அறிவிக்க அதிகாரிகள் தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால் போலீசாருடன் செய்தியாளர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். 2 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரும் இதுவரை வேட்பாளர்கள் பெற்ற அதிகாரபூர்வ வாக்குகள் குறித்த பட்டியலை இதுவரை தரவில்லை எனவும் செய்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


Tags : Erode , Erode, polling station, journalists argue
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...