×

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்... ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறுகிறது!!

அகர்தலா :  திரிபுராவில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடந்தது. இதில் 80% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஆளும் பாஜக - திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 40 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி

பாஜக+ 42
சிபிஎம்+10
திப்ரா மோத்தா : 8

எந்தெந்த கட்சிகள் கூட்டணி!!

*திரிபுரா தேர்தலில் பா.ஜனதா கட்சி மாநில கட்சியான ஐ.பி.எப்.டி. எனப்படும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.  55 இடங்களிலும், திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 6 இடங்களிலும் வேட்பாளரை நிறுத்தியுள்ளன.

*இதுவரை எதிர்எதிராக களத்தில் நின்ற காங்கிரசும், கம்யூனிஸ்டும் இந்த தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்துள்ளன. கம்யூனிஸ்டு 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

*மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  

*திப்ரா மோத்தா என்ற கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

Tags : Tripura Assembly Election ,Bajka Alliance , Tripura, Assembly, Elections, BJP
× RELATED பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று...