சென்னை: மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, 600 ஏழைகளுக்கு இலவச உபகரணங்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, சூளையைச் சேர்ந்த ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் சார்பில் ஏழை - எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்து, ரூ.30 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், 600 பயனாளிகளுக்கு செயற்கைக் கால், மூன்று சக்கர சைக்கிள், ஊன்று கோல், சக்கர நாற்காலி, கண்ணாடி, காது கேட்கும் கருவி உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் கங்கா பிரசாத், அனூப்சந்த் பிராக்சா, பிரமோத் சோப்ரா, டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன், டாக்டர் சுரேந்தர் குமார் போரா, பிரகாஷ் சந்த் குலேச்சா, மதன்லால் சவுவாட்டியா, வழக்கறிஞர் ஷர்னிக் ஜெயின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.