×

வீட்டு வசதி வாரியம் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை

சென்னை: வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரிந்து உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் வழங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், புதிதாக பொறுப்பேற்கும் 53 இளநிலை உதவியாளர்கள், 3 தொழில்நுட்ப உதவியாளர்கள், 1 தட்டச்சர், 2 ஓட்டுநர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதேபோல, 14 இளநிலை வரைவு அலுவலர்களுக்கு வரைவு அலுவலர்களாகவும், 1 கண்காணிப்பாளருக்கு உதவி வருவாய் அலுவலராகவும், 3 உதவியாளர்களுக்கு கண்காணிப்பாளர்களாகவும் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டது. நிகழ்வின்போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அபூர்வா, வாரிய மேலாண்மை இயக்குநர் சரவணவேல்ராஜ், வாரிய செயலாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சரவணமூர்த்தி மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags : Housing Board , Housing Board, Work Order on Compassionate Basis,
× RELATED தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை...