×

சுவாமிமலை மெயின் ரோட்டில் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்-தமிழ் தேசிய பேரியக்கம் கோரிக்கை

கும்பகோணம் : சுவாமிமலை மெயின் ரோட்டில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, தமிழ் தேசிய பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுவாமிமலை தமிழ் தேசிய பேரியக்க நகர செயலாளர் தீந்தமிழன் மற்றும் நிர்வாகிகள், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,கும்பகோணம்-திருவையாறு சாலையில் சுவாமிமலை மேட்டான் தெரு பகுதியில் குப்பை கழிவுகள் பெருமளவில் கொட்டியிருப்பதால் துர்நாற்றம் வீசி அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்னை போன்ற தொற்று நோய் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று திடீரென மழை பெய்ததால் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது.

இதனால் இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுவாமிமலை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். மனித தன்மையற்ற குப்பை கழிவுகள் கொட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : Swamimalai Main Road , Kumbakonam: The Tamil National Emergency has been requested to the District Collector to remove the garbage from the Swamimalai Main Road.
× RELATED சுவாமிமலை மெயின் ரோட்டில் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்