×

மெக்சிகோவின் எக்காடெபிக் நகரில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் ஆலை முழுவதும் தீயில் எரிந்து பலத்த சேதம்..!!

மெக்சிகோ: மெக்சிகோ நாட்டின் எக்காடெபிக் என்ற இடத்தில் பிளாஸ்டிக் ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எக்காடெபிக் என்ற இடத்தில் உள்ள பெரிய பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கன நேரத்தில் ஆலை முழுவதும் பரவிய தீ அங்கு வைக்கப்பட்டிருந்த பல டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கபளீகரம் செய்தது.

நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள், ஒரு வழியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றாலும் பிளாஸ்டிக் ஆலை முழுவதுமாக எரிந்துவிட்டது. பல மீட்டர் உயரத்திற்கு எழும்பிய கரும்புகையால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர். பிளாஸ்டிக் ஆலை தீ விபத்தால் சுவாசப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Tags : Ecatepic, Mexico , Mexico, fire, plastic plant
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...