×

திமுக முன்னாள் எம்பி கொலை வழக்கு தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த டிசம்பர் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அவரது தம்பி கவுஸ் ஆதம் பாஷாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில்,  கவுஸ் ஆதம்  பாஷா ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. டாக்டர் மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ்  தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். அரசு வழக்கறிஞர் வினோத் ஆஜராகி, தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து, ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார் இதையடுத்து, கவுஸ் ஆதம் பாஷாவின் ஜாமீன் மனுவை  நீதிபதி தமிழ்ச்செல்வி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : DMK , DMK ex-MP murder case dismissed brother's bail plea
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...