சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ல் தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு மார்ச் 2ல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தவுள்ளார். தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்த உள்ளார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மார்ச் 6ம் தேதி நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
