மதுரை: ராமநாதபுரத்தில் உள்ள சோழர்கால பாசி அம்மன் கோயிலை புனரமைக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. பாசி அம்மன் கோயில் பல நூற்றாண்டு பழமையானது என்பதால் தொல்லியல்துறை வல்லுநர்கள் கருத்து கேட்க வேண்டியுள்ளது. தொல்லியல்துறை நிபுணர்களின் அறிக்கையை பெற்று பின்னர் புனரமைக்க குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.