×

மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு.! ....போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றதால் பரபரப்பு.!

மதுரை : மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி வினோத் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி அடுத்த உலகனேரி பகுதியை சேர்ந்தவர் ரவுடி பாலமுருகன் என்ற டோரா பாலா(வயது 30). மதுரை உத்தங்குடி அடுத்த வளர்நகர், ராஜீவ் காந்தி நகரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் ரவுடி பாலமுருகன் நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாலமுருகனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிவிட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முக்கிய குற்றவாளி வினோத் என தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தேடுவதை அறிந்த ரவுடி வினோத் மதுரை மாட்டுதாவணி பகுதியில் பதுங்கி இருந்துள்ளார். இதனை அறிந்த சிறப்பு படை போலீசார், மதுரை மாட்டுதாவணி பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி வினோத் என்பவரை, சுற்றி வளைத்து கைது செய்தனர். வினோத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த கொலைக்காக பயன்படுத்திய ஆயுதங்களை வினோத் எங்கு மறைத்து வைத்துள்ளார் என்று விசாரணை நடத்திய போலீசார், அவரை கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போது, ரவுடி வினோத், மறைத்து வைத்து இருந்த அரிவாளால் போலீசாரை தாக்கி தப்ப முயன்றார். இதனையடுத்து போலீசார் தற்காப்புக்காக , வினோத்தின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவரை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுரை வண்டியூரை சேர்ந்தவர் ரவுடி வினோத் மீது அடிதடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு திருச்சி மற்றும் சென்னையில் போலீசாரை தாக்கிய ரவுடிகளை சுட்டு பிடித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Madurai ,Rudi ,Matthavi Stirring , Madurai, Mattuthavani, rowdy, gunfire
× RELATED மதுரை மாநகராட்சி தூய்மைப்...