×

டாஸ்மாக் கடையில் தகராறு செய்த ரவுடி கைது

பெரம்பூர்: வியாசர்பாடி பள்ளத்தெருவை  சேர்ந்தவர் சரத்குமார் (29), பிரபல ரவுடியான இவர் மீது சோழவரம், ரெட்ஹில்ஸ், புழல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள மதுபானக் கடையில் சரத்குமார் மது அருந்திக் கொண்டிருந்தார். அங்கு வேலை செய்யும் ஊழியர்கள், சரத்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். அப்போது அவர், கடை ஊழியர்களிடம் நானே பெரிய ரவுடி, என்னிடமே பணம் கேட்கிறீர்களா என்று பாரில் வேலை செய்தவர்களை சரத்குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சரத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Tasmac , Arrested rowdy who quarreled at Tasmac shop
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்