சென்னை: சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடக்கிறது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இன்று மேயர் பிரியா தலைமையில் நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் கடந்த 16ம் தேதி மறைந்த 122வது வார்டு உறுப்பினர் ஷீபா வாசுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பிறகு கூட்டம் ஒத்தி வைக்கப்படும். மீண்டும் மாமன்ற கூட்டம் மார்ச் 2ம் தேதி கூடுகிறது.