×

சென்னை பெண் அசாமில் படுகொலை: ராணுவ அதிகாரி கைது

கவுகாத்தி: அசாமில்  ராணுவ அதிகாரி ஒருவரால் சென்னை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்து  விசாரித்து வருகின்றனர். அசாம் மாநிலம் தேஸ்பூர் 4வது கார்ப்ஸ் ராணுவ  பிரிவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக (பிஆர்ஓ) பஞ்சாபை சேர்ந்த லெப்டினன்ட்  கர்னல் அம்ரீந்தர் சிங் வாலியா என்பவர் பணியாற்றி வந்தார். இவரை  சந்திப்பதற்காக  கடந்த 14ம் தேதி சென்னையை சேர்ந்த வந்தனா  (35) என்ற  பெண் கவுகாத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி காம்ரூப் மாவட்டம் தேசிய ெநடுஞ்சாலையின்  சாங்காரி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மூட்டை கட்டி கிடப்பதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற  போலீசார், அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அது வந்தனா யின் சடலம் என்பது தெரியவந்தது.


இதுகுறித்து  சோனிட்பூர் கூடுதல் எஸ்பி மதுரிமா தாஸ் கூறுகையில், ‘லெப்டினன்ட்  கர்னல்  அம்ரீந்தர் சிங் வாலியாவுக்கும், சடலமாக மீட்கப்பட்ட பந்தனா  என்ற  பெண்ணுக்கும் நீண்டகாலமாகவே தொடர்பு இருந்துள்ளது. அம்ரீந்தர் சிங் வாலியாவை பார்க்க சென்னையில் இருந்து அந்த பெண் தனது 4 வயது பெண் குழந்தையுடன் கவுகாத்திக்கு ரயிலில் வந்துள்ளார். அவர்களை அம்ரீந்தர் சிங் நேரில் வந்து அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஏற்பட்ட சண்டையில் ஆவேசமடைந்த அம்ரீந்தர் சிங் வாலியா, வந்தனா யை  கொன்று சாங்சாரி பகுதியில் வீசி எறிந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையான வந்தனா யின் நான்கு வயது  பெண் குழந்தையை கடந்த 24ம் தேதி மேற்குவங்க மாநிலம்  ஹவுராவில்  மீட்டுள்ளோம். இவ்வழக்கை ராணுவ நீதிமன்றம் விசாரிக்காது. தற்போது  அம்ரீந்தர் சிங் வாலியாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’  என்றார்.





Tags : Assam , Chennai Woman Massacre in Assam: Army Officer Arrested
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...