×

கும்மிடிப்பூண்டியில் குடும்ப தகராறு; இருவர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த முனுசாமி நகரை சேர்ந்தவர் ராணி (46). இவர், குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராணிக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த ராணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதேபோல், கும்மிடிப்பூண்டி அடுத்த தேவம்பட்டு, காட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (46). இவர், குடும்ப தகராறு காரணமாக வீட்டில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்  பொன்னேரி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு, ரிசோதனை செய்த டாக்டர்கள், மகேந்திரன் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினர். மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் குறித்தும் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.  


Tags : Kummidipoondi , Family dispute in Kummidipoondi; Two committed suicide
× RELATED ஹோலி கொண்டாட்டத்தின்போது கல்லூரி...