×

விழுப்புரம் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரிடம் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இதுவரை 13 பேரை பிடித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே செங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்துள்ளனர். மாணவியுடன் இருந்த மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு வெள்ளிப்பொருட்கள், செல்போன் ஆகியவை பறித்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மாணவன், மாணவி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அய்யங்கோயில்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சிந்தாமணியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் நேற்று இரவு விக்கிரவாண்டி அருகே உள்ள செங்கமேடு ஏரிக்கரைக்கு சென்று பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர், மேலும் சிறுவனை கத்தியால் குத்திவிட்டு 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு சென்றுள்ளனர்.

கத்தி குத்தில் படுகாயமடைந்த சிறுவனும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியும் தற்போது முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கொண்ட அந்த மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

காதலனை கத்தியால் குத்தி விட்டு 17 வயது சிறுமியான காதலியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 13 பேரை பிடித்து வெவ்வேறு இடங்களில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Viluppuram , Investigation of 13 people in the case of rape of a class 12 student near Villupuram
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!