திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் பகுதியில் எலாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரி உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமாக எலாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது. அந்த எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து புகை மண்டலம் எழுந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கும், திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு காவல் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், எலாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனம் என்பதால் தீ மளமளவென பரவி பரவியது. இந்நிலையில் அணுகு வந்த தீயணைப்பு துறையினர் 2 தண்ணீர் லாரிகளுடன் உதவுடன் தீயை அணைக்க முயன்றனர். பின்னர், தீ நிறுவனம் முழுவது பற்றி எரிந்ததால் 10 தண்ணீர் லாரி உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டாவசமாக நிருவத்திற்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இந்த விபத்து குறித்து திருமுருகன்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீ விபத்தானது மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.