×

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் உருவத்தை பொறிக்க வேண்டும் : இந்து மகாசபா கோரிக்கை

டெல்லி : ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் உருவத்தை பொறிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா கோரிக்கை விடுத்துள்ளது. ஆர்எஸ்எஸ் , பாஜக போன்ற அமைப்புகளுக்கு சாவர்க்கரே கதாநாயகனாக அறியப்படுகிறார். பாஜகவினரால் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் சாவர்க்கர் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் சர்ச்சைகளும் சேர்ந்து எழுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சுதந்திர போராட்ட வீரரும், இந்து மகாசபா முன்னாள் தலைவருமான வீர சாவர்க்கரின் 58வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள இந்து மகாசபா அலுவலகத்தில் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.

அப்போது, ஒன்றிய அரசுக்கு இந்து மகாசபா சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதிலாக வீர சாவர்க்கர் மற்றும் இதர சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பொறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்லும் சாலைக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Veera Savarkar ,Mahatma Gandhi ,Hindu , Banknotes, Mahatma Gandhi, Veera Savarkar, Hindu Mahasabha
× RELATED கைம்பெண் செங்கோல் வாங்கக் கூடாது என்பதா?: ஐகோர்ட் கிளை கண்டனம்