×

ராயபுரத்தில் அதிரடி சம்பவம் போதையில் ரகளை செய்த ரவுடியின் கை எலும்பு உடைப்பு: பிரச்னையை தட்டி கேட்ட நபர் ஆவேசம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த ரவுடியை, ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கினார். இதில் ரவுடிக்கு கை முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராயபுரம் செட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (35). பிரபல ரவுடியான இவர்மீது ராயபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரவு செட்டி தோட்டப் பகுதியில் குடிபோதையில் இருந்த அரவிந்த், அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், அரவிந்த்தை தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், இரும்பு கம்பியை எடுத்து அரவிந்த் கையில் அடித்துள்ளார். இதில் அரவிந்த்தின் வலது கை மணிக்கட்டில் காயம் பட்டது. இதனையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

அவருக்கு கை முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Rayapuram , Action in Rayapuram, drunken raider
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...