×

கொடுங்கையூரில் பானிபூரி வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு: 2 மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

பெரம்பூர்: கொடுங்கையூரில் வடமாநில பானிபூரி வியாபாரியை தாக்கி ரூ.2000 பணம் பறித்த 2 மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் அன்னை சத்யாநகர் மெயின் தெருவில் வசித்து வருபவர் விஜய்சிங் (40). வட மாநிலத்தைச் சேர்ந்த இவர், கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் தள்ளு வண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். தினமும் மாலை 4 மணிக்கு வந்து வியாபாரம் செய்துவிட்டு, இரவு 10 மணிக்கு விஜய்சிங் மீண்டும் தனது அறைக்கு செல்வது வழக்கம்.

இதேபோன்று நேற்றுமுன் தினம் வியாபாரம் செய்துவிட்டு, வழக்கம்போல இரவு 11 மணி அளவில் கொடுங்கையூர் - தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை குப்பைமேடு அருகே தனது தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 நபர்கள், விஜய்சிங்கிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே, அவரை அடித்து அவரிடம் இருந்த ரூ.2000 பணத்தை பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய்சிங், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   


Tags : Bannipuri ,Kodungayur ,Asamis , Kodunkaiyur, panipuri dealer, money extortion,
× RELATED வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது