×

பாக். டிரோனை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்

அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் பறந்த மர்ம டிரோனை பிஎஸ்எப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.இதுகுறித்து இந்திய எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் சர்வதேச எல்லையை ஒட்டிய பகுதிகளில் நேற்று காலை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஷாஜதா என்ற இடத்தில் எல்லையில் இருந்து டிரோனின் சத்தம் கேட்டது. சந்தேகத்துக்குரிய வகையில் பறந்த டிரோனை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : BSF , Pak. Drone shot down by BSF
× RELATED இந்திய – வங்கதேச எல்லையில்...