×

தாயின் அஸ்தியை கரைக்க தனி விமானம் மூலம் ஓபிஎஸ் காசி பயணம்

பெரியகுளம்: இறந்த தாயின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்காக, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 பேர் மதுரையிலிருந்து தனி விமானத்தில் நேற்று காசிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள், வயது முதிர்வு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் காலமானார். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை அவரது இறுதி சடங்கு நடந்தது.

தாயின் அஸ்தியை கங்கையில் கரைக்க ஓபிஎஸ் மற்றும் சகோதரர்கள் முடிவு செய்தனர். இதன்படி நேற்றுகாலை மயானத்திற்கு சென்று அஸ்தியை பெற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், ஓ.ராஜா உள்ளிட்ட 5 பேர் காலை 11 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு காரில் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ராஜா உள்ளிட்ட 5 பேரும் தனி விமானத்தில் காசிக்கு புறப்பட்டு சென்றனர்.



Tags : OPS ,Kasi , OPS Kashi traveled by private plane to cremate the ashes of the mother
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி