×

பிரசாரம் ஓய்ந்தது - வெறிச்சோடியது தொகுதி; ஈரோடு இடைத்தேர்தல் நாளை வாக்குப்பதிவு: 238 வாக்குச்சாவடிக்கு 1,430 ஓட்டு மெஷின் அனுப்பி வைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. ஈரோட்டில் தங்கியிருந்து வெளியூர் தொண்டர்கள் சொந்த ஊர் திரும்பினர். இதனால், கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக காணப்பட்ட ஈரோடு நகரம் தற்போது வெறிச்சோடியுள்ளது.  239 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,430 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பதற்றமான 34 வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நாளை( 27ம் தேதி) நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.
 
இந்நிலையில், தொகுதி முழுவதும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று 5 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.  

ஈரோடு பெரியார் நகரில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு மாலை கோவை திரும்பிய அவர் பீளமேடு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பெரிய அக்ரஹாரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதியில்  இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.

பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. இதையடுத்து, ஈரோட்டில் தங்கியிருந்து வெளியூர் தொண்டர்கள் சொந்த ஊர் திரும்பினர். இதனால், கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக காணப்பட்ட ஈரோடு நகரம் தற்போது வெறிச்சோடியுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் நாளை தங்களது வாக்குகளைச் செலுத்த, தொகுதிக்கு உள்பட்ட 52 இடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்

238 வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் 20 சதவீதம், அதாவது 48 வாக்குச் சாவடி கூடுதல் மையங்கள் (ரிசர்வ்) என மொத்தம் 286 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடி மையங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியாற்றுவர். அதன்படி, 238 வாக்குச்சாவடி மையங்களுக்கு 286 முதன்மை அலுவலர்கள், மூன்று நிலைகளிலான 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரிய 62 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இத்தேர்தலில் பயன்படுத்தப்படும் 1,430 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் 310 விவிபேட், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பெட்டக அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட்ட 20 சரக்கு வாகனங்களில், 20 மண்டல அலுவலர்களின் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன.

மேலும் அந்த வாகனத்தில் வாக்குச்சாவடி அலுவலரும், 238 வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்படும் பொருள்களான பென்சில், ரப்பர், பேனா, பசை, ஸ்டேப்ளர், ஸ்டேப்ளர் பின், சிறிய மற்றும் பெரிய பிளாஸ்டிக் டிரே, பிளாஸ்டிக் டிரம், குப்பைகளை போடுவதற்கான பிளாஸ்டிக் பக்கெட், சிறிய கயிறு, நூல், சீல் வைக்க தேவையான பொருள்கள், ஓட்டு பெட்டிகளை மறைத்து வைக்க பயன்படுத்தப்படும் பிரத்யேக அட்டை என 81 வகையான பொருட்களும் தனித்தனி சாக்கில் எடுத்துச் செல்லப்பட்டன.

இத்தேர்தலையொட்டி, 238 வாக்குச்சாவடிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பதட்டமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்ட 34 வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் அனைத்து வாக்கு சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

இதுதவிர அனைத்து வாக்குச்ச்சாவடிகளிலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார்,


Tags : Propaganda rested - deserted block; Erode by-election polling tomorrow: 1,430 voting machines sent to 238 polling stations
× RELATED 3ம் கட்ட தேர்தல்களம் பரபரப்பாகிறது...