×

‘காதலியை பலாத்காரம் செய்து கைவிட்டார்’: மணமேடையில் மணமகன் கைது

திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ராஜேந்திர நகரை சேர்ந்தவர் பிருத்வி (28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பிருத்வி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் இளம்பெண்ணுடன் சந்திப்பை பிருத்வி தவிர்த்து வந்துள்ளார். அவர் போன் செய்தபோதும் பேசவில்லையாம்.

இந்நிலையில் பிருத்விக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி ஒரு இளம்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்களின் திருமணம் ஆசிஸ் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 24ம்தேதி நடைபெற இருந்தது. திருமணத்திற்காக உறவினர்கள் அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்து இருந்தனர். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பிருத்வியின் காதலி மயிலார்தேவப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதில் பிருத்வி என்னை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் என்னிடம் அடிக்கடி ஏராளமான பணத்தையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசாருடன் திருமண மண்டபத்திற்கு சென்ற இளம்பெண், அங்கு மணமேடையில் தாலி கட்ட தயார் நிலையில் இருந்த பிருத்வியிடம், என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணமா என ஆவேசமாக கேட்டார். இதனால் பிருத்வி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தி மோசடி மற்றும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து பிருத்வியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் மணப்பெண் மற்றும் அவரது பெற்றோர் கதறி அழுதனர். திருமண மேடையில் மணமகள் கண்ணெதிரே மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Tags : Groom , 'He raped and abandoned his girlfriend': Groom arrested at wedding ceremony
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...