×

கோடியக்கரையில் சரணாலயத்தில் நில பறவைகள் மாதிரி கணக்கெடுக்கும் பணி: 71 வகை பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

வேதாரண்யம்: கோடியக்கரை சரணாலயத்தில் மாதிரி நிலப்பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 71 வகை பறவை இனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கானக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி சென்ற மாதம் 28, 29ம்தேதிகளில் நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லட்சம் நீர்பறவைகள் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில்.

147 வகையான பறவை இனங்கள் வந்து சென்றதாகவும், அதில் கோடியக்கரைக்கு 96 வகையான பறவைகள் வந்து சென்றுள்ளதும் தெரிய வந்தது. தற்போது வரும் மார்ச் 4,5 தேதிகளில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது இதையொட்டி திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார் மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் என 10 குழுக்களாக பிரிந்து மாதிரி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.கோடியக்கரை வனப்பகுதியில் காலவக்கரை சோழர்கால கலங்கரை விளக்கம் சித்தர் கட்டம் மற்றும் வனப்பகுதி கோடியக்கரை, கோடியக்காடு கிராம பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலப் பறவைகள் மாதிரி கணக்கெடுபபு நடைபெற்றது.

கணக்கெடுப்பில் கருங்குயில், புள்ளி குயில், மீன் கொத்தி, மரங்கொத்தி, கவுதாரி, செண்பகம், கிரீன் டீ ஈட்ட மணிப்புறா, வக்கா உள்ளிட்ட 71 வகையான பறவை இனங்கள் கண்டறியப்பட்டது. இந்த மாதிரி கணக்கெடுப்பில் 2,700 பறவைகள் தற்போது உள்ளன என தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு போதுமான மழையும், பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவுவதால் நீர் பறவைகள் லட்சக்கணக்கில் வந்துள்ளது. அடுத்த மாதம் மார்ச் 4,5 தேதிகளில் நடைபெறும் கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதன் பிறகு கணக்கெடுப்பில் இந்த ஆண்டு பறவைகள் வரத்து குறித்து தெரியவரும் என வனத்துறை அலுவலர் ஆயூப் கான் தெரிவித்தார்.

Tags : Kodiakarai Sanctuary , Land Bird Sampling Survey in Kodiakarai Sanctuary: Discovery of 71 Bird Species
× RELATED கோடியக்கரை சரணாலயத்துக்கு இலங்கை கடல் காகங்கள் அதிகளவில் வருகை