×

திருநங்கை கொலையில் லாரி டிரைவர் கைது

திருவொற்றியூர்: திருநங்கையை கொலை செய்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.  எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் திருநங்கை சரவணன் என்ற சனா (27). இவர், கடந்த 22ம் தேதி மணலி, எம்.ஜி.ஆர். நகர் அருகே சாலையோரத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து, திருநங்கையை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது திருநங்கையின் செல்போனுக்கு கடைசியாக பேசிய நபர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த கணேசன் (48) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர்தான் சனாவை கொலை செய்த விவரம் தெரியவந்தது. கணேசனின் சொந்த ஊர் ராமநாதபுரம்.

இவர் லாரி டிரைவர் ஆவார். இவரது குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் உள்ளனர். வேலைக்காக கணேசன் சென்னை வந்து சத்தியமூர்த்தி நகரில் தனிமையில் தங்கியுள்ளார். சம்பவத்தன்று திருநங்கையுடன் பேசிக் கொண்டிருந்தபோது பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அவரை கீழே தள்ளிவிட்டு, கழுத்தை இறுக்கி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, கணேசனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Lorry , Transgender murder, lorry driver arrested,
× RELATED மார்த்தாண்டம் லாரி பேட்டை முன்...