×

ஓபிஎஸ்சின் தாயார் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார்  பழனியம்மாள் (95).பெரியகுளத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனையுற்றோம். ஓ.பன்னீர் செல்வம் உட்பட 5 மகன்களையும், 4 மகள்களையும் பெற்று வளர்த்த  பெருமைக்குரிய தாயார். பெரும் குடும்பத்தின் ஆணிவேராக திகழ்ந்த தாயாரின் மறைவு பெரும் வேதனையளிக்கிறது. அன்னாரது மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னையைப் பிரிந்து வாடும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.

Tags : Mutharasan ,OPS , Mutharasan condoles death of OPS's mother
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...