×

பாகிஸ்தானின் முதல் திருநங்கை: செய்தி தொகுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

லாகூர்: பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி தொகுப்பாளர் என்று அழைக்கப்படும் மார்வியா மாலிக் (26) என்பவர், நேற்று லாகூரில் உள்ள மருந்தகத்தில் இருந்து தனது இல்லத்திற்கு திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து மார்வியா மாலிக் தப்பினார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பாகிஸ்தானில் உள்ள திருநங்கைகளுக்காக மார்வியா மாலிக் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.

அவர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அறுவை சிகிச்சைக்காக வெளியூறு சென்றுவிட்டு லாகூர் திரும்பினார். இந்த நிலையில் அவரை கொல்லும் விதமாக இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக மார்வியா மாலிக் உயிர்தப்பினார். தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகிறோம்’ என்றனர்.


Tags : Pakistan , Pakistan's First Transgender: News anchor shot at
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...