×

சட்டீஸ்கரில் நக்சல் அட்டூழியம் :எஸ்ஐ உட்பட 3 காவலர் வீரமரணம்

சுக்மா :சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உதவி ஆய்வாளர் உள்பட மூன்று மாவட்ட ரிசர்வ் காவலர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஜகர்குண்டா மற்றும் குண்டேட் கிராமங்களுக்கு இடையே இன்று காலை 9 மணியளவில் டிஆர்ஜி குழு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் உள்பட 3 காவலர்கள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உதவி ஆய்வாளர் ராமுராம், காவலர் குஞ்சம் ஜோகா, மற்றும் சைனிக் வஞ்சம் பீமா ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Chattiskar , Chhattisgarh, Naxal, SI, Police, Heroic death
× RELATED பா.ஜவில் குழப்பம்