×

டிஎன்பிஎல் வீரர்கள் ஏலம் நிறைவு

சென்னை: டிஎன்பிஎல் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று நிறைவடைந்தது. மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள ரிசார்ட்டில்  இரண்டு நாட்கள் நடந்த டிஎன்பிஎல் வீரர்கள் ஏலத்தில் பெய்சி திருச்சி, ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன. ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள், ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் என 8 அணியிலும் சேர்த்து மொத்தம் 154 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சாய் சுதர்சன் அதிகபட்சமாக ரூ.21.6 லட்சத்துக்கு லைகா கோவை கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். சஞ்சய் யாதவ் (ரூ.17.6 லட்சம், சேப்பாக்), ஷிவம் சிங் (ரூ.15.95 லட்சம், திண்டுக்கல்), சோனு யாதவ் (ரூ.15.2 கோடி, நெல்லை), அபிஷேக் தன்வார் (ரூ.13.2 கோடி, சேலம்) ஆகியோர் அடுத்த 4 இடங்களைப் பிடித்துள்ளனர்.

Tags : TNPL , TNPL Players Auction Completed
× RELATED டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது!