ஷில்லாங்: மேகாலயாவைப் பற்றி நினைக்கும் போது, திறமையான மனிதர்கள், துடிப்பான மரபுகள் என் நினைவுக்கு வருகின்றன. நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான செய்தியுடன் நான் இங்கு வந்துள்ளேன். இந்தியா வெற்றியின் புதிய உயரங்களை எட்டி வருகிறது, மேகாலயா அதற்கு வலுவான பங்களிப்பை அளித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.